என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வக்கீல் சங்கத்தலைவர் கைது
நீங்கள் தேடியது "வக்கீல் சங்கத்தலைவர் கைது"
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து வால்பாறை சங்க தலைவரை போலீசார் கைது செய்தனர். #ADMK #EdppadiPalanisamy
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் வால்பாறை வக்கீல் சங்கத்தலைவராக உள்ளவர் ஷாநவாஸ் கான் (வயது 58). முன்னாள் அரசு வக்கீல். பொள்ளாச்சி ஜோதி நகரில் வசிக்கும் இவர் வால்பாறை, பொள்ளாச்சி கோர்ட்டுகளுக்கு சென்று வருகிறார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு போஸ்டர்கள் மகாலிங்கபுரம், பஸ் நிலையம், கடைவீதி, தாலுகா அலுவலகம், ரவுண்டானா உள்பட பல பகுதிகளில் ஷாநவாஸ் கான் பெயரில் ஒட்டப்பட்டிருந்தது. இது தவிர முதலமைச்சர் குறித்து அவதூறு வாசகங்கள் அடங்கிய நோட்டீசுகளும் அவரது பெயரில் விநியோகம் செய்யப்பட்டது.
இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசுக்கு தெரியவந்ததும் போலீசார் பொள்ளாச்சி முழுவதும் ஒட்டப்பட்டிருந்த அவதூறு போஸ்டர்களை கிழித்தனர். துண்டுபிரசுரங்களையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள ஷாநவாஸ் கான் வீட்டிற்கு சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் போஸ்டர் மற்றும் நோட்டீசுகளை ஷாநவாஸ் கான் வினியோகம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் ஷாநவாஸ் கானை கைது செய்து பொள்ளாச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 1-வது நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான வக்கீல் ஷாநவாஸ் அழகிரி ஆதரவாளராக செயல்பட்டதால் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர். மீண்டும் தி.மு.க.வில் இணைய மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார்.
கைதான வக்கீல் ஷாநவாஸை கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் சந்தித்து பேசினார். #ADMK #EdppadiPalanisamy
கோவை மாவட்டம் வால்பாறை வக்கீல் சங்கத்தலைவராக உள்ளவர் ஷாநவாஸ் கான் (வயது 58). முன்னாள் அரசு வக்கீல். பொள்ளாச்சி ஜோதி நகரில் வசிக்கும் இவர் வால்பாறை, பொள்ளாச்சி கோர்ட்டுகளுக்கு சென்று வருகிறார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு போஸ்டர்கள் மகாலிங்கபுரம், பஸ் நிலையம், கடைவீதி, தாலுகா அலுவலகம், ரவுண்டானா உள்பட பல பகுதிகளில் ஷாநவாஸ் கான் பெயரில் ஒட்டப்பட்டிருந்தது. இது தவிர முதலமைச்சர் குறித்து அவதூறு வாசகங்கள் அடங்கிய நோட்டீசுகளும் அவரது பெயரில் விநியோகம் செய்யப்பட்டது.
இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசுக்கு தெரியவந்ததும் போலீசார் பொள்ளாச்சி முழுவதும் ஒட்டப்பட்டிருந்த அவதூறு போஸ்டர்களை கிழித்தனர். துண்டுபிரசுரங்களையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள ஷாநவாஸ் கான் வீட்டிற்கு சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் போஸ்டர் மற்றும் நோட்டீசுகளை ஷாநவாஸ் கான் வினியோகம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் ஷாநவாஸ் கானை கைது செய்து பொள்ளாச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 1-வது நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான வக்கீல் ஷாநவாஸ் அழகிரி ஆதரவாளராக செயல்பட்டதால் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர். மீண்டும் தி.மு.க.வில் இணைய மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார்.
கைதான வக்கீல் ஷாநவாஸை கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் சந்தித்து பேசினார். #ADMK #EdppadiPalanisamy
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X